இடுகைகள்

நம்மையறிந்தால்...

படம்
  நானும் வாடிக்கிடக்கும் என் வலைப்பூவிற்கு தண்ணீர் தெளித்து புத்துணர்வு அளிக்க வேண்டும் என்று பல மாதங்களாக முயன்று கொண்டே இருந்தேன். நாட்கள் தான் போனதே தவிர உருப்படியாய் ஒன்றும் நடக்க காணோம். நேற்று, 2024 புத்தாண்டு பிறந்ததை காரணமாக வைத்து வலைப்பூவை புதுப்பித்து விடலாம் என்று ஓர் எண்ணம். என்ன எழுதுவது? நமக்கு நன்றாக வருவது அடுத்தவர்க்கு அறிவுரை தருவது தான்.  சரி, ஒரு அறிவுரை பதிவோடு மீண்டும் சமூகத்தொண்டை துவக்கி விட வேண்டியது தான் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை இரவு  முதலே புத்தாண்டு வாழ்த்துக்களும், அது தொடர்பான பதிவுகளும் சமூக வலைத்தளப் பக்கங்களில் நிறைய துவங்கின. குறிப்பாக whatsapp statusல். அதில் இத்தனை வருடங்கள் இல்லாத ஒரு நல்ல மாற்றத்தை என்னால் காணமுடிந்தது.  வழக்கமான வாழ்த்துப்பதிவுகளோடு,  பலரும் சென்ற வருடம் தொடங்கிய போது அவர்கள் வாழ்க்கையில் எங்கே இருந்தார்கள், இப்போது எங்கே இருக்கிறார்கள், என்னென்ன சாதித்தார்கள் , என்னென்ன இழந்தார்கள் என்பதாக ஒரு சுய ஆராய்ச்சி செய்து பதிவுகளாக வெளியிட்டிருந்தார்கள். அவற்றில் பெரும்பாலானவை, சாதித்...

ஒற்றைக்கொலுசு (சிறுகதை)

படம்
 அ திகாலையில் வழக்கம் போல் எங்கள் பகுதியில் இருக்கும் பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்கு சென்றேன். அது ஒன்றும் பெரிய பூங்கா இல்லை. ஆனால், சிறியதாக இருந்தாலும் இந்த பகுதி மக்களால் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றிலும், கொன்றை,நாவல்,அரசு முதலிய மரங்களும், நடைப்பாதையை ஒட்டி பலவகையான பூச்செடிகளும், ஒரு ஓரத்தில் குழந்தைகள் விளையாட சறுக்குமரம், ஊஞ்சல் முதலான சாதனங்களும், நடுவில் வட்ட வடிவில் செயற்கை நீருற்றும், சரியான இடைவெளியில் மின்விளக்குகளும், தண்ணீர் குழாய்களும் உண்டு. அதிகாலையில் நடைபயிற்சியில் ஈடுபடுவோர் மட்டுமே பெரும்பாலும் வருவார்கள். மாலையில் நடைபயிற்சி செய்வோர், விளையாட சிறுவர்,சிறுமியர், காற்று வாங்கி கதை பேச வருபவர்கள் என பலரும் வருவார்கள். நான் அலுவலகத்தில் இருந்து வர நேரமாகும் என்பதால் அதிகாலையிலேயே சுமார் பத்து சுற்றுகள் நடந்துவிட்டு போய் விடுவேன். மாலையில் என் மனைவி என் ஐந்து வயது மகனை அழைத்துக்கொண்டு வந்து மற்ற சிறுவர்களோடு விளையாட விட்டுவிட்டு, தானும் தோழிகளோடு பேசி பொழுதைப்போக்கி விட்டு வந்துவிடுவாள். இன்று நான் நடக்க ஆரம்பித்த போது, பூங்காவில் வயதான ஆண்கள் இரண...

ஹே சினாமிகா...!

படம்
    “ஹே சினாமிகா” ரிலீஸ் ஆகி இன்னியோட ஒரு மாசம் ஆகிடிச்சு. ஆனா, ஒ.டி.டி. ல நாலு நாட்கள் முன்னாடிதான் ரிலீஸ் ஆகியிருக்கு. அதனால இப்போ இந்த ரிவ்யூ சரியாத்தானிருக்கும். முதல் படத்தை இயக்கியிருக்கிற பிருந்தா மாஸ்டருக்கு வாழ்த்துகள். ஆஸ் யூஸ்வல் முக்கோண காதல் கதை தான். ஆனா, வித்தியாசமா சொல்லியிருக்காங்க.   துல்ஹர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் மூணு பேருக்கும் நடுவுல ஆன் ஸ்க்ரீன்ல டப் காம்படீஷன்னா ஆப் ஸ்க்ரீன்ல டிரெக்டர் பிருந்தா மாஸ்டர், மியூசிக் டிரெக்டர் கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவாளர் ப்ரீதா ஜெயராமன் மூணு பேரும்  ஒருத்தருக்கொருத்தர் சளைக்காம வேலை செஞ்சிருக்காங்க.   பாண்டிச்சேரியோட அழக நாம பார்க்காத  அற்புதமான கோணங்கள்ல கேமரால பதிவு பண்ணியிருக்காங்க ப்ரீதா.  கோவிந்த் வசந்தா காதல் கதையோட உயிரோட்டத்தை படம் முழுக்க பொழிஞ்சிருக்கார். குறிப்பாக “யாரிசைக்க வருகுவதோ...” பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் குரலில் இதயத்தை ஊடுருவுகிறது. பிருந்தா அவர்களுக்கு  முதல் படம்ன்னு சொன்னா நம்பவே முடியாது. கதை, வசனம், பாடல்கள் எல்லாத்துலயும் சூப்பரா ஸ்...