ஒற்றைக்கொலுசு (சிறுகதை)
அ திகாலையில் வழக்கம் போல் எங்கள் பகுதியில் இருக்கும் பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்கு சென்றேன். அது ஒன்றும் பெரிய பூங்கா இல்லை. ஆனால், சிறியதாக இருந்தாலும் இந்த பகுதி மக்களால் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றிலும், கொன்றை,நாவல்,அரசு முதலிய மரங்களும், நடைப்பாதையை ஒட்டி பலவகையான பூச்செடிகளும், ஒரு ஓரத்தில் குழந்தைகள் விளையாட சறுக்குமரம், ஊஞ்சல் முதலான சாதனங்களும், நடுவில் வட்ட வடிவில் செயற்கை நீருற்றும், சரியான இடைவெளியில் மின்விளக்குகளும், தண்ணீர் குழாய்களும் உண்டு. அதிகாலையில் நடைபயிற்சியில் ஈடுபடுவோர் மட்டுமே பெரும்பாலும் வருவார்கள். மாலையில் நடைபயிற்சி செய்வோர், விளையாட சிறுவர்,சிறுமியர், காற்று வாங்கி கதை பேச வருபவர்கள் என பலரும் வருவார்கள். நான் அலுவலகத்தில் இருந்து வர நேரமாகும் என்பதால் அதிகாலையிலேயே சுமார் பத்து சுற்றுகள் நடந்துவிட்டு போய் விடுவேன். மாலையில் என் மனைவி என் ஐந்து வயது மகனை அழைத்துக்கொண்டு வந்து மற்ற சிறுவர்களோடு விளையாட விட்டுவிட்டு, தானும் தோழிகளோடு பேசி பொழுதைப்போக்கி விட்டு வந்துவிடுவாள். இன்று நான் நடக்க ஆரம்பித்த போது, பூங்காவில் வயதான ஆண்கள் இரண...